ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலர் தனிமைப்படுத்தலில்!

Date:

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பன் பகுதியில் சட்டவிரோத குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொலிசாரால் கடந்த 19.04.21 அன்று குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இன்னிலையில் குறித்த நபருக்கு வவுனியா சிறைச்சாலையில் கடந்த 20.04.21 அன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவு 23.04.21 அன்று வெளியாகியுள்ளது இதில் சின்னச்சாளம்பனை சேர்ந்த குறித்த கைதிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்னிலையில் குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளியினை கைதுசெய்த பொலிசார் அவருடன் சம்மந்தப்பட்டவர்கள், நீதிமன்ற வாளகத்தில் அவருடன் தொடர்பினை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிசாருக்கு 24-04-2021 அன்று பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

spot_imgspot_img

More like this
Related

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அமைச்சர்கள் வெளியேறியதால் அதிருப்தி

.ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் கூறாமல்...

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக் கழகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாஸ்டர்ஸ் கரம் போட்டி – 2026

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக்கழகம் தனது 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்