மேலும் 3 மரணங்கள்!

Date:

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 3 மரணங்கள் நேற்று (26) பதிவாகியுள்ளன.இதன்படி, இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 647 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம்,

கல்பாத்த பிரதேசத்தைச் சேர்ந்த, 70 வயதான பெண் ஒருவர், களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (26) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த, 92 வயதான ஆண் ஒருவர், IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (25) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, உக்கிர சிறுநீரக சிதைவு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த, 70 வயதான பெண் ஒருவர், ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, மாலபே நெவில் பெனாண்டோ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (26) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், உக்கிர கொவிட்-19 நிமோனியாவுடன் ஏற்பட்ட சிக்கலான நிலை காரணமான இருதய மற்றும் சுவாச செயற்பாடு செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நேபாளத்துக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: திபெத்தில் அணை உடைந்துவிட்டதாக தகவல்

நேபாளத்தை ஒட்டிய திபெத் பகுதியில் அணை ஒன்று உடைந்துவிட்டதாக வெளியான தகவலை...

இயற்கை வளங்கள் இல்லாத சுவிட்சர்லாந்து பணக்கார நாடாக மாறியது எப்படி? இலங்கை ஏன் இன்னும் போராடுகிறது?

தங்கம் போன்ற விலைமதிப்புள்ள உலோகங்களோ, கச்சா எண்ணெயோ இல்லாத, கடலால் சூழப்படாத...

நேபாளத்தில் பேரழிவு வெள்ளம்: 469 பேர் உயிரிழப்பு; 1,000 பேர் காணாமல் போனதாக தகவல்

நேபாளத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்