ஜா எல, குடககபொல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்தார். காதலன் படுகாயமடைந்துள்ளார்.
23 ஆம் திகதி புகையிரத கடவையொன்றில் இந்த விபத்து நேர்ந்தது.
அந்த யுவதி பணி முடிந்ததும், அண்மையில் தனது காதலனுடன் வீடு திரும்பிய போது, புகையிரதத்தில் மோதி விபத்திற்குள்ளாகினர்.
இதில் யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காதலன் படுகாயமடைந்தார்.
ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த யுவதி இரவு 8 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி விபத்துக்குள்ளானார். பலத்த காயமடைந்த இளைஞர் ராகம மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீதுவவை சேர்ந்த கே.இரேஷா ருமேஷிகா (21). என்பவரே உயிரிழந்தார். நாமல் ஜூட் சம்பத் (22 ) என்பவரே காயமடைந்தார்.
ஜா-எல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




