29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

பலாலி வீதியில் பயங்கர விபத்து: 10 படையினர் காயம்!

யாழ்.பலாலி வீதி உரும்பிராய் சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 10ற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பலாலி வீதியால் பலாலி நோக்கி பயணித்த இராணுவ வாகனம் ஒன்றும், கோப்பாய் – மருதனார்மடம் வீதியால் மருதனார்மடம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் உரும்பிராய் சந்தியை கடக்கும்போது விபத்தில் சிக்கியுள்ளன.

சம்பவத்தில் டிப்பர் வாகனம் கவிழ்ந்துள்ளதுடன், இராணுவ வாகனத்தில் இருந்த 13 பேர்வரை காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 3 பேர் மோசமாக காயமடைந்துள்ளதாகவும் சம்பவ இடத்தில் இருந்தோர் கூறியுள்ளதுடன் காயமடைந்தவர்கள் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment