27.6 C
Jaffna
March 29, 2024
குற்றம்

மகனின் பிறந்தநாளில் நண்பர்களுக்கு கஞ்சா பார்ட்டி: ஆசிரியை கைது!

தனது மகனின் பிறந்தநாளில் போதைப்பொருள் விருந்து வைத்த ஆசிரியையும்,  மாணவர்களும் வெள்ளவத்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளவத்தை, பாமன்கடை பகுதியில் உள்ள இரண்டு மாடி வீட்டில் இந்த விருந்துபசாரம் நடந்தது.

சர்வதேச பாடசாலையொன்றின் ஆசிரியையே, தனது மகனின் பிறந்தநாளை இப்படி போதையாக கொண்டாடியுள்ளார்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்திய போது, 10 கிராம ஐஸ், 2000 மில்லி கிராம் கேரள கஞ்சா என்பன மீட்கப்பட்டன.

41 வயதான ஆசிரியை, மற்றொரு பெண், 18 வயதிற்கும் 26 வயதிற்கும் உட்பட்ட 12 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்

சந்தேக நபர்கள் மவுண்ட் லவனியா நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment