ஏப்ரல் 26: இலங்கையின் கொரோனா நிலவரம்; 10 தகவல்கள்!

Date:

♦இலங்கையில் இன்று 952 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 102,331 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7,110 ஆக உயர்ந்துள்ளது.

♦கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 266 பேர் இன்று மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94,577 ஆக உயர்ந்தது.

♦திருகோணமலை, கம்பஹா, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று இரவு 8 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டன.

♦மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனாக்கள், கத்தோலிக்க பாடசாலைகள் ஏப்ரல் 30ஆம் திகதி வரை மூடப்பட்டன.

♦மொனராகலை, சியம்பலந்துவ மற்றும்புத்தள கல்வி வலயங்களில் உள்ள 15 பாடசாலைகள் ஏப்ரல் 30ஆம் திகதி வரை மூடப்படும்.

♦பத்தரமுல்லையிலுள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகத்தின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதையடுத்து, அந்த அலுவலகம் ஏப்ரல் 27, 28 ஆம் திகதிகளில் மூடப்படும்.

♦நாளை (27) முதல் அனைத்து அரசு நிறுவனங்களின் செயற்பாட்டிற்கும் தேவையான ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானித்து, சுழற்சி முறையில் ஊழியர்களை பயன்படுத்தும் அதிகாரம், அந்தந்த நிறுவன தலைவர்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இதற்கான சுற்றறிக்கை நாளை வெளியாகும்.

♦தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுமென இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

♦நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகளில் கொரோனா நோயாளிகளிற்கான படுக்கைகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, தீவிர சிகிச்சை பிரிவுகளின் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

♦வடக்கில் இன்று 15 பேருக்கு தொற்று உறுதியானது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 பேருக்கு தொற்று உறுதியானது.

spot_imgspot_img

More like this
Related

நேபாளத்துக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: திபெத்தில் அணை உடைந்துவிட்டதாக தகவல்

நேபாளத்தை ஒட்டிய திபெத் பகுதியில் அணை ஒன்று உடைந்துவிட்டதாக வெளியான தகவலை...

இயற்கை வளங்கள் இல்லாத சுவிட்சர்லாந்து பணக்கார நாடாக மாறியது எப்படி? இலங்கை ஏன் இன்னும் போராடுகிறது?

தங்கம் போன்ற விலைமதிப்புள்ள உலோகங்களோ, கச்சா எண்ணெயோ இல்லாத, கடலால் சூழப்படாத...

நேபாளத்தில் பேரழிவு வெள்ளம்: 469 பேர் உயிரிழப்பு; 1,000 பேர் காணாமல் போனதாக தகவல்

நேபாளத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்