இலங்கையில் மீண்டும் மலேரியா: அபாயம் வடக்கில் புதிய வகை நுளம்பு!

Date:

வடக்கில் நகர்ப்புறங்களில் மலேரியா பரப்பும் ஒரு புதிய வகை நுளம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் இலங்கை மலேரியா இல்லாத தேசமாக அறிவிக்கப்பட்ட போதிலும், இந்த நோய் மீண்டும் நாட்டில் தலை தூக்கும் சாத்தியம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் ஊடகங்களிடம் பேசிய இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் பேராசிரியர் அனுலா விஜேசுந்தர இந்த விஷயத்தை திறம்பட கையாளுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இலங்கையின் வெப்பநிலை மற்றும் நீர்வளம் இனங்கள் இனப்பெருக்கம் செய்ய ஏற்ற நிலைமைகள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் ஒரு புதிய வகை அனோபிலிஸ் டிபென்சி நுளம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முன்னர் இந்தியாவில் காணப்பட்டது.

இந்தியா மற்றும் சீனாவில் பணியாற்றுபவர்கள், குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் யாத்ரீகர்கள், இந்த நோயை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது என்றார்.

மொசாம்பிக் மற்றும் மடகாஸ்கருக்குச் செல்லும் இரத்தின வணிகர்கள் தங்கள் பயணத்தின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனுலா விஜேசுந்தர கேட்டுக்கொண்டார்.

ஐ.நா அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை படையினர் தென் சூடான் மற்றும் மத்திய ஆபிரிக்காவிலிருந்து திரும்பி வரும்போது, மலேரியா நோய்க்காவிகளாக இருக்க வாய்ப்புள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

எனவே, பேராசிரியர் அத்தகைய நெருக்கடியைப் பற்றி விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்