முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றவியல் புலனாய்வுத் துறையால் இன்று (24) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படுவதற்கு முன்பு எம்.பி. பதியுதீன் தனது சகோதரர் ரியாஜ் பதியுதீனும் கைது செய்யப்பட்டதாக ட்வீட் செய்துள்ளார்.
“சிஐடி இன்று அதிகாலை 1.30 மணி முதல் பௌத்தலோக மாவத்தையில் உள்ள எனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே எனது சகோதரரை கைது செய்துள்ளனர். இப்போது வரை அனைத்து சட்டப்பூர்வ அதிகாரிகளுக்கும் ஒத்துழைத்துள்ளேன். இது அநியாயம். ” எம்.பி பதியுதீன் ட்வீட் செய்துள்ளார்.
எந்த குற்றமும் இல்லாத என்னை, எந்த ஆவணமும் இல்லாத நிலையில் என்னை கைது செய்வது அரசியல் பிடியாணை என ரிசாட் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய விசாரணையில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



