நுவரெலியா மாநகரசபையின் சுகாதார உத்தியோகத்தர் ஒருவர் உணவகம் ஒன்றில் கொடூரமாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் போது முகக்கவசம் அணியுமாறு உணவக ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து அவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
புத்தாண்டு பண்டிகை காலங்களில் நடந்த இந்த தாக்குதலில் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.




