உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டாவது வருட நினைவு தினம் இன்று வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்றது.
2019 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி கொழும்பு பிரபல விடுதிகளிலும், தேவாலயம் மீதும் இஸ்லாமிய கடும் போக்காளர்களால் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அத்தாக்குதலில் பலியான மக்களை நினைவுகூர்ந்து, இறந்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும் வவுனியா அந்தோனியார் தேவாலயத்தில் அருட்தந்தை ஜெயபாலன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏற்றி விஷேட வழிபாடு இன்று காலை இடம் பெற்றிருந்தது.
குறித்த தேவாலயத்தில் பொலிஸ், இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புடன் வழிபாடுகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1