23ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திறப்பு!

Date:

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி எதிர்வரும் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீள திறக்கப்படவுள்ளது.

பல்கலைக்கழகத்திற்குள் இருந்த நினைவுத்தூபி, அரசின் உத்தரவிற்கமைய பல்கலைகழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி 8ஆம் திகதி இடித்து அழிக்கப்பட்டது.

இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. பல்கலைகழக மாணவர்கள், அனைத்து தமிழ் மக்கள், இந்தியா, சர்வதேச அமைப்புக்கள், தூதர்கள் என பல மட்டங்களில் எதிர்ப்பு வெளியானது. மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.

மாணவர்களின் போராட்டம் சிறு சலசலப்பு என வீம்பாக இருந்த யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் இறங்கி வந்து, இருட்டோடு இருட்டாக மாணவர்களை சமாதாப்படுத்தி, மீண்டும் நினைவுத்தூபி அமைக்க அடிக்கல் நாட்டினார்.

கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி கட்டுமான பணிகள் ஆரம்பித்தன.

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம் என்ற பெயரில் அமைக்கப்படும் நினைவுத்தூபி, வரும் 23ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்