மஹரகம நகரசபை பெண் உறுப்பினர் ஒருவருக்கு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில், நகர சபையின் மற்றுமொரு பெண் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினரை நுகேகொட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி கொடிகமுவ மயானத்தில் நடந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள சென்றிருந்த போது இந்த மோதல் நடந்தது.
முறைப்பாடு செய்த பெண் உறுப்பினர கர்ப்பவதியாக இருக்கிறார்.




