31.3 C
Jaffna
March 28, 2024
உலகம்

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி!!

இதுகுறித்து சீனாவின் தேசிய சுகாதார அமைப்பு கூறும்போது, “ நாட்டின் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. கொரோனா பாதித்தவர்களில் ஒருவர் வெளி நாட்டிருந்து வந்தவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் மற்றும் மூன்றாம் அலையினால் உலக நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் சூழலில் சீனாவில் கடந்த சில மாதங்களாக 20 க்கும் குறைவாகவே கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டு வருகிறது.

சீனாவில் 2019-ம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் கரோனாவுக்கு14 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 28 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இதுவரை கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது எனத் தெளிவான தகவல் இல்லை.

சீனாவுக்கு சென்று ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பு சீனாவின் ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவவில்லை என்று விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment