29.3 C
Jaffna
March 29, 2024
குற்றம்

ஆவாவையே மிரள வைக்கும் 16 வயது பயங்கர ரௌடிகளின் அட்டகாசம் (CCTV)

மருதானை பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் குறித்து பொலிஸ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, கொலைவெறி கும்பலின் 2 இளைஞர்கள் கைது செய்ய்பட்டுள்ளனர்.

அண்மையில் முச்சக்கர வண்டியில் மோதிய 16 வயது சிறுவன் தலைமையிலான கும்பலால் இந்த தாக்குதல் ஏற்பட்டது.

கடந்த 10ஆம் திகதி விபத்து சம்பவம் இடம்பெற்றது. 22 வயது இளைஞனின் முச்சக்கர வண்டியில் 16 வயது சிறுவன் மோதி விபத்திற்குள்ளானான்.

சிறுவனின் தவறினாலேயே விபத்து நிகழ்ந்ததாக முச்சக்கரவண்டி சாரதி குறிப்பிட்டார். சிறுவன் தரப்பு அதை ஏற்கவில்லை.

முச்சக்கர வண்டி மதானை, மொஹிதீன் மஸ்ஜித் மாவத்தையிலுள்ள வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, கொட்டன், வாள் முதலிய ஆயுதங்களுடன் வந்த கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. இதில் சாரதி படுகாயமடைந்தார்.

முச்சக்கர வண்டியையும் அடித்து உடைத்தனர்.

22 வயதான முச்சக்கர வண்டி சாரதி தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
2
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment