போலி விசாவில் கனடா செல்ல முயன்ற ஆரையம்பதி இளைஞன் கைது!

Date:

போலி விசாவைப் பயன்படுத்தி, துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக கனடா செல்ல முயன்ற இளைஞன் ஒருவர், இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை கண்காணிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

மட்டக்களப்பு, ஆரையம்பதியை சேர்ந்த 24 வயதான இளைஞன் ஒருவரே கைதானார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துபாய் புறப்படவிருந்த EK-649 இலக்க விமானத்தில் பயணிப்பதற்காக இன்று அதிகாலை 3.15 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார்.

அவர் சமர்ப்பித்த கனடா விசாவில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, எல்லை கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அங்கு தொழில்நுட்ப பரிசோதனையின் போது கனடிய விசா மோசடியானது என கண்டறியப்பட்டது. ஒன்று என்று உறுதிப்படுத்தப்பட்டது.

இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், போலி விசாவை தயாரிக்க முகவர் ஒருவரிற்கு தனது தாயார் பணம் செலுத்தியதாக வாக்குமூலமளித்தார்.

அந்த இளைஞன் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய சிஐடியினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...

00 புதிய பேருந்துகள் ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு

ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு 600 புதிய பேருந்துகள் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும்...

மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா: 29ஆம் திகதி காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகளும் பேரணியும்

இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்