யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நல்லூர் செட்டித்தெருவில் வசிக்கும் 81 வயதான மூதாட்டியொருவர் வீட்டில் உயிரிழந்திருந்தார். அவரது உடலிலிருந்து மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதியானது.
யாழ் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.




