ஹிட்லர் எந்த அரசியல்வாதிக்கும் முன்மாதிரியாக இருக்க முடியாது: கோட்டா தரப்பிற்கு சொன்னார் ஜெர்மனி தூதர்!

Date:

ஹிட்லர் எந்த அரசியல்வாதிக்கும் முன்மாதிரியாக இருக்க முடியாது என இலங்கை அரசியல்வாதிகளிற்கு சூடு வைத்துள்ளார் இலங்கைக்கான ஜெர்மனி தூதர் ஹோல்கர் ஷுபர்ட்.

தனது ருவிற்றரில் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்ச ஹிட்லரை போல செயற்பட வேண்டுமென்றே அவருக்கு வாக்களித்தவர்கள் விரும்பினர், அவர் அப்படி செயற்படாததே அரசாங்கத்தின் மீதான விமர்சனத்திற்கு காரணம் என அரிய கருத்தொன்றை தற்போதைய அரசின் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறியிருந்தார்.

இது தொடர்பில் ஜேர்மனிய தூதர் இட்ட பதிவில்,

“ஒரு ஹிட்லர்” இன்று இலங்கைக்கு நன்மை பயக்கும் என்று கூறுவதை நான் கேட்கிறேன். மில்லியன் கணக்கான இறப்புகளுடன், கற்பனைக்கு அப்பாற்பட்ட மனித துன்பங்களுக்கும் விரக்திக்கும் அடால்ஃப் ஹிட்லர் தான் காரணம் என்று அந்தக் குரல்களை நினைவூட்டுகிறேன். நிச்சயமாக எந்த அரசியல்வாதிக்கும் முன்மாதிரி இல்லை!“ என தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்