24.5 C
Jaffna
February 3, 2025
Pagetamil
கிழக்கு

மட்டக்களப்பில் போலி ஆவணம் தயாரித்தவர் சிக்கினார்!

மட்டக்களப்பு வாழைச்சேனையில் போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையம் ஒன்றை நேற்று (11) முற்றுகையிட்ட பொலிசார், ஒருவரை கைது செய்ததுடன், மடிகணணி, பிறிண்டர் மற்றும் போலி ஆவணங்கள் என்பனவற்றை மீட்டுள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியிலுள்ள குறித்த வீட்டை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.

இதன்போது கணணிபயிற்சி நெறிக்கான ஆவணங்கள் உட்பட பல ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 44 வயதுடைய ஒருவரை கைது செய்ததுடன், ஆவணத் தயாரிப்பதற்கு பயன்படுத்திய மடிகணணி, பிறிண்டர், மற்றும் காகித அட்டைகள்; என்பனவற்றை மீட்டுள்ளனர்

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்திற்கு தடை

east tamil

திருகோணமலை முகாமடியில் கடலலைக்குள் சிக்குண்டு ஒருவர் மரணம் (Update)

east tamil

திருகோணமலையில் கடலலையில் சிக்கி ஒருவரை காணவில்லை

east tamil

திருக்கோணமலையில் கடல் அரிப்பு தடுக்க 6.5 மில்லியன் செலவில் கருங்கல் வேலி அமைப்பு

east tamil

திருகோணமலை மடத்தடி ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு

east tamil

Leave a Comment