புதிய ஆசிய சாதனை நிகழ்த்திய ரோஷன் அபேசுந்தர!

Date:

விமானப்படை வீரர் ரோஷன் அபேசுந்தர பாக்கு நீரிணையை நீந்திக்கடப்பதில் புதிய ஆசிய சாதனையை படைத்துள்ளார்.சாதனையை படைத்துள்ளார். பாக்கு நீரிணையில் 59 கிலோமீட்டர் 300 மீட்டர் தூரத்தை 28 மணித்தியாலம் 19 நிமிடம் 43 வினாடிகளில்  நீந்திக்கடந்தார்.

ரோஷன் அபேசுந்தர தாலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையான பாக்கு நீரிணையை நீந்திக்கடக்கும் முயற்சியை, நேற்று முன்தினம் ஆரம்பித்தார். இன்று காலை மீண்டும் அவரை தலைமன்னாலை வந்தடைந்தார்.

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி சென்று, மீண்டும் திரும்பி வர 28 மணித்தியாலம் 19 நிமிடம் 43 வினாடிகளை எடுத்துக் கொண்டார்.

இதுவரை 14 நீச்சல் வீரர்கள் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்திருந்தாலும், ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு சென்று மீண்டும் திரும்பி வந்த தனித்துவமான சாதனையை இதற்கு முன்னர் ஒரே ஒரு இலங்கையர் மட்டுமே மேற்கொண்டார். 1971 ஆம் ஆண்டில் குமார் ஆனந்தன் இந்த சாதனையை முதன்முதலில் நிகழ்த்தினார். இந்த தூரத்தை கடக்க அவர் 51 மணிநேரம் எடுத்துக் கொண்டார்.

32 வயதான ரோஷன் அபேசுந்தர, மாத்தறை மத்திய கல்லூரியின் பழைய மாணவர். 2008 ஆம் ஆண்டு முதல் இலங்கை விமானப்படையில் கடமையாற்றும் அவர்,  இலங்கையில் பல்வேறு சாகச கடல்- நீச்சல் பயணங்களில் வெற்றிகரமாக பங்கேற்றார். கடந்த மார்ச்சில் 49 கிலோமீற்றர் தூரத்தை 23 மணித்தியாலத்தில் கடந்து இலங்கை தேசிய நீச்சல் சாதனையை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேருந்துக்குள் இளம்பெண் மீது அத்துமீறல்: நடத்துனர் கைது!

பிபில-மொனராகல வழித்தடத்தில் இயங்கும் தனியார் பயணிகள் பேருந்தில் பயணித்த பெண் பயணி...

கம்பஹா உஸ்மானுக்கு 72 மணித்தியால தடுப்புக்காவல்

அசர்பைஜானிலிருந்து பிடிக்கப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பதுவத்த சமரவிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது வெளிப்படுத்தப்பட்ட...

பசிலுக்கு அடிவயிற்றில் புளியை கரைத்த பல்கலைக்கழக மாணவர் சங்கம்

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சங்கம் (INTA), சில காலமாக பசில் ராஜபக்சவுக்குச் சொந்தமானது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்