பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பான விசாரணைகளுக்காக நேற்றிரவு 8 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட வி.மணிவண்ணன், 6 மணி நேர விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட வி.மணிவண்ணன் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்குப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்படுகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1