தங்கொட்டுவையில் மீட்கப்பட்ட இரண்டு பாரவூர்தி தேங்காய் எண்ணெய்களிலும், புற்றுநோயை ஏற்படுத்தக்ககூடிய அஃப்லரொக்ஸின் இரசாயனம் உள்ளமை உறுதியாகியுள்ளது.
சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுதத்த சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இரண்டு தேங்காய் எண்ணெய் தாங்கிகளிலும் இருந்து பெறப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் இந்த விடயம் உறுதியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



