தலவாக்கலை நகரில் அதிரடி சோதனை!

Date:

தலவாக்கலை நகரில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் இன்று (7) பொதுச்சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை மேற்கொண்டனர்.

ஹட்டன், கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், லிந்துலை நகரசபை சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இந்த பரிசோதனையை மேற்கொண்டனர்.

நகரில் உள்ள சில்லறை மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வரும் தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் கவனம் செலுத்தினர்.

பல வர்த்தக நிலையங்களில் விற்பனைக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன.

சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய உணவகங்கள் சிலவற்றின் மீது நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், மீன் விற்பனை நிலையமொன்றில் பாவனைக்கு உதவாத மீன்கள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்