27.6 C
Jaffna
March 28, 2024
குற்றம்

காதல் திருமணம் செய்த யாழ் ஜோடி: வாள்களுடன் விரட்டும் ‘வில்லன்’ உறவுகள்!

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த குழுவினர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியதுடன், தளபாடங்களையும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த காதல் ஜோடியொன்று வீட்டின் சம்மதமின்றி வவுனியாவிற்கு வந்து, அங்கு பதிவு திருமணம் செய்துள்ளனர். அங்குள்ள வீடொன்றை வாடகைக்கு பெற்று குடியிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு 7.30 மணியளவில் வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த குழுவினர், வீட்டு வளாகத்தில் வாடகைக்கு வசித்துவரும் இளைஞரையும், யுவதியையும் தேடியதுடன், அவர்களை காணாத நிலையில் வீட்டின் உரிமையாளர்களை அச்சுறுத்தி, வீட்டு தளபாடங்களையும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.

யுவதியின் தரப்பினரே அந்த குழுவில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரால் வவுனியா பொலிசாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment