நேற்று நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் பதிவாகினர்.
கொழும்பில் நேற்று 54 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று நாட்டில் 141 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 93,436 ஆக அதிகரித்துள்ளது.
கம்பஹாவிலிருந்து 15 பேரும், வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 19 பேரும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 12 பேரும், யாழ்ப்பாணத்திலிருந்து 6 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.
குருநாகலில் இருந்து 5 பேரும், பதுளையிலிருந்து 4 பேரும், கேகாலை, மொனராகலையிலிருந்து தலா 3 பேரும், காலி, முல்லைத்தீவிலிருந்து 2 பேரும், கண்டி, இரத்னபுரி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இருந்து தலா ஒவ்வொருவர் அடையாளம் காணப்பட்டனர்..
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
+1