பிரதேசசபை உறுப்பினர் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகராக தன்னை அடையாளம் காட்டி, பலரிடமிருந்து பணம் வசூலித்தமைக்காக கொழும்பு, பொரளை பகுதியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பேஸ்லைன் பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நிலம், வீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவதன் அடிப்படையில் இவர் பலரிடமிருந்து பணம் வசூலித்துள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.



