30.9 C
Jaffna
April 20, 2024
இலங்கை

3 நாள் துக்கதினம் அனுட்டிப்போம்: செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு!

மன்னார் மாவட்டத்தின் முன்னாள் ஆயரின் மறைவு தமிழினத்திற்கு பேரிழப்பாகும். இதற்காக தமிழர்கள் அனைவரும் மூன்று நாட்களுக்கு துக்க தினம்அனுஷ்டிக்க வேண்டும் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

இது தொடர்பாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  விடுத்துள்ள அறிக்கையில்

யுத்தகாலத்தில் இன மத மொழி பேதம் பாராமல் மனிதம் மட்டுமே மேன்மை என கருதி அனைத்து மக்களுக்குமான சேவைகளை வழங்கியவர் முன்னாள் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள்.

இராயப்பு ஜோசப் அவர்கள் சுகயீனம் காரணமாக இன்று (1)அதிகாலையில் இயற்கை எய்தினார் அவரது இழப்பானது எமது தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பாக அமைந்துள்ளது

ஆயர் அவர்கள் அனைத்து மதங்களையும் ஒரே மாதிரியாகவே பார்த்து வந்துள்ளார் இதனால் மதத்தலைவர்கள் பிற மதத்தவர்களின் அன்பை அதிகமாக பெற்றவர் இராயப்பு ஜோசப் ஆண்டகை என்றால் அது மிகையாகாது

யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்காக அயராது பாடுபட்டவர் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காகவும் அரசியல் கைதிகளுக்கும் ஓடிஓடி உழைத்தவர்

தமிழ் மக்கள் அனைவரும் நிம்மதியாகவும் சுய கௌரவத்துடனும் வாழ வேண்டுமென்பதில் உறுதியான பற்றோடு இருந்தவர்

இன்று அவர் எம்மை விட்டு பிரிந்து உள்ளார் ஆகவே எமது ஆயரின் ஆன்மா சாந்தி அடைவதற்காக அனைத்து மக்களின் வீடுகளிலும் கருப்புக் கொடிகளை பறக்கவிட்டு மூன்று நாட்கள் துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என்று கேட்டு நிற்கின்றேன் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இளம் ஆசிரியை கைது!

Pagetamil

அலுவலக நேரத்திற்கு முன்பாக படிப்படியாக மூடப்படும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம்; மக்கள் அசௌகரியம்: பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு

Pagetamil

சினிமா பாணி சம்பவம்: பொறி வைத்து கொல்லப்பட்ட கள்ளக்காதலன்; 34 வருடங்களின் பின் கொலையாளி கைது!

Pagetamil

உடலுறவு கொள்ளாமலே கர்ப்பமானாரா 13 வயது சிறுமி?

Pagetamil

கடலில் பொதுமக்களின் உதவியுடன் குழந்தை பிரசவித்தாரா யாழ்ப்பாண இளம் தாய்?: தீயாக பரவும் போலிச்செய்தி!

Pagetamil

Leave a Comment