30.7 C
Jaffna
March 29, 2024
இந்தியா

300 கிலோ ஹெரோயின், ஆயுதங்களுடன் இலங்கை மீன்பிடி படகு மடக்கிப் பிடிப்பு!

போதைப் பொருள் கடத்தி வந்த இலங்கையின் மீன்பிடிப் படகை கேரள மாநிலம் விழிஞ்சியம் அருகே சென்னை மண்டல போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்துள்ளனர்.

அந்தப் படகில் இருந்த 300 கிலோ 323 கிராம் எடை கொண்ட ஹெரோயின், 5 ஏகே.47 துப்பாக்கிகள், ஆயிரம் தோட்டாக்கள், மற்றும் பல முக்கியமான ஆவணங்கள் போன்றவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த 25ஆம் திகதி படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

‘ரவிஹன்சி’ என்ற அந்த படகில் இருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உளவுத்துறையினர் போதைப் பொருள் கும்பலின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டு தகவல் அளித்ததன் பேரில் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment