31.3 C
Jaffna
March 28, 2024
விளையாட்டு

டெல்லி கப்பிட்டல்ஸ் அணி கப்டனாக ரிஷாப் பண்ட்!

டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் கப்டனாக ரிஷாப் பண்ட் நியமனமிக்கப்பட்டுள்ளார்.

14வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 9ஆம் திகதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் கப்டனாக களம் இறங்க இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் சமீபத்தில் புனேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் பீல்டிங் செய்கையில் காயம் அடைந்தார். அவருக்கு இடது தோள்பட்டை இறங்கி இருப்பதால் விரைவில் சத்திர சிகிச்சை செய்யப்படுகிறது. இதனால் அவர் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து டெல்லி அணியின் கப்டன் பொறுப்பை ஏற்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. மூத்த வீரர்கள் ஆர்.அஸ்வின், ரஹானே, ஸ்டீவன் சுமித், இளம் வீரர் ரிஷாப் பண்ட் ஆகியோரின் பெயர்கள் கப்டன் பதவிக்கு பரிசீலனை செய்யப்பட்டன.

இந்த நிலையில் இந்த சீசனுக்கான டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் கப்டனாக 23 வயது விக்கெட் கீப்பரான ரிஷாப் பண்ட் இருப்பார் என்று அந்த அணி நிர்வாகம் நேற்று இரவு அறிவித்தது. 2016ஆம் ஆண்டில் இருந்து டெல்லி அணிக்காக விளையாடி வரும் ரிஷாப் பண்ட் முதல்முறையாக அணியை வழிநடத்த இருக்கிறார்.

ரிஷாப் பண்ட் கூறுகையில், “டெல்லி அணியுடன் எனது ஐ.பி.எல். பயணம் 6 ஆண்டுக்கு முன்பு தொடங்கியது. இந்த அணிக்கு என்றாவது ஒரு நாள் கப்டனாக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எப்போதும் உண்டு. அந்த கனவு இன்று நனவாகியுள்ளது. அதை பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன்“ என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குஜராத்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

Pagetamil

தோல்வியின் பிடியில் பங்களாதேஷ்

Pagetamil

இரண்டாவது இன்னிங்ஸிலும் தனஞ்ஜய, காமிந்து சதம்: பங்களாதேஷின் வெற்றியிலக்கு 510

Pagetamil

பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!

Pagetamil

சிஎஸ்கே புதிய கப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

Pagetamil

Leave a Comment