முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் 8 பேரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அண்றைய தினம் அவர்களுக்கு பிணை வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தின் போது 50 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய பிணை முறிகளை தவறாக பயன்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



