30.6 C
Jaffna
April 10, 2025
Pagetamil
குற்றம்

மாற்றான் மனைவியில் ஆசையால் விபரீதம்; வீதியோரம் சடலம்: இரத்தம் வடியும் கத்தியுடன் சரணடைந்த தம்பதி!

சிகிரியா புதிய நகரப்பகுதியில் பிரதான வீதியோரம் ஒரு நபரின் சடலம்  பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (30) சடலம் மீட்கப்பட்டது.

பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், கூர்மையான ஆயுதத்தால் அவரது கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த கொலை தொடர்பாக ஒரு விமானப்படை சிப்பாயும் அவரது மனைவியும் இன்று காலை கூர்மையான ஆயுதத்துடன் சிகிரியா பொலிசில் சரணடைந்துள்ளனர்.

இறந்தவர் மெல்சிரிபுர, அலுத்கமவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிசாரிடம் சரணடைந்த சிகிரியா விமானப்படை தளத்தின் ஊழியர் மற்றும் அவரது மனைவி சிகிரியா புதிய நகரத்தினருகில் அருகே ஒரு வாடகை வீட்டில் வசித்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

மெல்சிரிபுர பகுதியிலேயே விமானப்படை ஊழியரின் குடும்பம் வசித்து வந்தது. எனினும், அவரது மனைவியுடன், உயிரிழந்தவர் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்ததால், 15 நாட்களின் முன்னரே, புதிய நகரத்தில் வீடொன்றை வாடகைக்கு பெற்று, விமானப்படை ஊழியரின் குடும்பம் அங்கு குடிவந்துள்ளது.

அவரது தொல்லை தாங்க முடியாமல் கொலையை செய்ததாக சரணடைந்த இருவரும் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரும், விமானப்படை ஊழியரின் மனைவியும் சில காலத்தின் முன்னர் வீட்டை விட்டு ஓடிச் சென்றுள்ளனர். பின்னர் பொலிசாரின் தலையீட்டினால் அவர்கள் கண்டறியப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டது. இதை ஏற்று, மீண்டும் தனது கணவனுடன் அந்த பெண் வசித்து வந்துள்ளார்.

உயிரிழந்தவர் தனது குடும்பத்தை பிரிந்து தனித்து வாழ்ந்து வந்துள்ளார்.

விமானப்படை ஊழியரின் மனைவி, தொடர்பை அறுத்த பின்னரும் அந்த நபர் தொல்லை கொடுத்து வந்தது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த கொலை அந்த பெண்ணால் செய்யப்பட்டதா அல்லது விமானப்படை ஊழியரால் செய்யப்பட்டதா அல்லது இருவரும் சேர்ந்து செய்ததா என்பது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்

3வது காதலா?: 2வது காதலனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் நிகழ்ந்த விபரீதம்!

Pagetamil

15 வயது சிறுமியின் கழுத்தில் கத்தி வைத்து பாலியல் பலாத்காரம்

Pagetamil

தொலைபேசியில் அறிமுகமான 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய நடத்துனர் கைது!

Pagetamil

யாழில் பயங்கர ரௌடிகள் கைது!

Pagetamil

14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்: 17 முதல் 71 வயது வரையான 4 பேர் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!