நேற்று 215 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 92,303 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 151 பேர், மினுவாங்கொட – பேலியகொட கொருானா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 15 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 49 தொற்றாளர்களும் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.
தற்போது, 2,823 பேர் நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, வைரஸிலிருந்து குணமடைந்த 291 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 88,914 ஆக உயர்ந்தது. தொற்று சந்தேகத்தில் 393 பேர் தற்போது கண்காணிப்பில் உள்ளனர்.