ஜெர்மனியிலிருந்து தமிழர்களை திருப்பியனுப்புவதற்கு எதிராக போராட்டம்!

Date:

புகலிட தஞ்சம் கோரியுள்ள இலங்கை தமிழர்களை இந்த வாரம் ஜெர்மனி அரசு, நாடு கடத்தும் என வெளியான தகவலையடுத்து, எதிர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

ஜெர்மனியின் பெரென் மற்றும் போர்ப்ஷைமில் உள்ள தடுப்பு மையங்களுக்கு முன்னால் நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கையர்களைக் கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்ட  சிறப்பு சட்ட அமலாக்கப் பிரிவு, ஜெர்மனி முழுவதும் பல்வேறு இடங்களிலிருந்து சுற்றி வளைப்பை நடத்தி ஈழத்தமிழ் அகதிகளை கைது செய்து தடுப்பு மையங்களிற்கு கொண்டு சென்றுள்ளது.

சுமார் 100 வரையான தமிழ் புகழிட கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. டசெல்டார்ஃப் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30 இலங்கை தமிழர்கள் இந்த வார தொடக்கத்தில் கொழும்புக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கரூர்...

காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை கொன்றது எப்படி? – போலீஸாரிடம் நடித்துக் காட்டிய சியா கோயல்

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்​டேட் தொழில​திபர்...

பாதசாரி கடவையில் ரோஸ்மேரியை பந்தாடிய பிரதேசசெயலாளர்!

மாத்தறை பொது மருத்துவமனைக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடக்கும் வெள்ளைக்கோடு இடத்தில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்