நேற்று 249 தொற்றாளர்கள்!

Date:

நேற்று 249 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 92,088 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 237 பேர் மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 87,466 ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வந்த 12 நபர்களும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டன்.

2,904 பேர் தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில்  சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்றிலிருந்து குணமடைந்த 235 பேர் மருத்துவமனைகளில் இருந்து நேற்று வெளியேறினர், குணமடைநதவர்களின் எண்ணிக்கையை 88,623 ஆக உயர்ந்துள்ளது. தொற்று சந்தேகத்தில் 411 பேர் தற்போது மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ் – தவெக ஒன்றிய செயலாளர் நீக்கம்

விருதுநகரில் போலியோ சொட்டு மருந்து முகாமில் ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு போலியோ...

இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற கவிஞர் புவியரசு மறைவு

இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற புகழ்பெற்ற எழுத்தாளரும், கவிஞருமான...

புதிய கடற்படை தளபதியாக தமியன் பெர்னாண்டோ நியமனம்!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ரியர் அட்மிரல் தமியன் பெர்னாண்டோவை இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்