27.6 C
Jaffna
March 29, 2024
குற்றம்

சக மாணவியை வீடியோ எடுத்து மிரட்டி துஷ்பிரயோகம் செய்த 15 வயது மாணவர்கள் இருவர் கைது!

15 வயதான மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெக்கிராவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றி, தரம் 10 இல் மாணவியுடன் ஒரே வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களே  கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி அதே வகுப்பிலுள்ள இன்னொரு மாணவருடன் பேசி வருகிறார். அதை இரகசியமாக வீடியோ செய்த மாணவர்கள், அந்த மாணவியை மிரட்டியுள்ளனர்.

தாம் சொல்வதை போல நடக்க வேண்டுமென்றும், இல்லையென்றால் வீீடியோவை மாணவியின் வீட்டிற்கு காண்பிப்போம் என மிரட்டியுள்ளனர்.

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த மாணவி, தனது சகோதரியின் பராமரிப்பில் வளர்கிறார்.  விடயம் சகோதரிக்கு தெரிந்து விடக்கூடாது என்ற அச்சத்தில், மாணவர்களின் சொற்படி மாணவி செயற்பட்டுள்ளார்.

அவரை தனிமையான பகுதிக்கு அழைத்து சென்று சில தடவைகள் துர்நடத்தையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்தை அறிந்த மாணவியின் சகோதரி, கெக்கிராவ கெக்கிராவா பொலிஸின் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்தில் முறையிட்டார். பொறுப்பதிகாரியான உப பொலிஸ் பரிசோதகர் இந்திராணி துரிதமாக செயற்பட்டு மாணவர்கள் இருவரையும் கடந்த 25ஆம் திகதி கைது செய்தார். துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி கெக்கிராவ மாவட்ட மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த கெக்கிராவ மாவட்ட நீதிவான் கே.கே.ராணியகொட, மாணவர்கள் இருவரையும் அநுராதபுரம் அபயா சிறுவர் இல்லத்தின் தங்க வைக்க உத்தரவிட்டதுடன், வரும் 31ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

What’s your Reaction?
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment