சக மாணவியை வீடியோ எடுத்து மிரட்டி துஷ்பிரயோகம் செய்த 15 வயது மாணவர்கள் இருவர் கைது!

Date:

15 வயதான மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெக்கிராவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றி, தரம் 10 இல் மாணவியுடன் ஒரே வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களே  கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி அதே வகுப்பிலுள்ள இன்னொரு மாணவருடன் பேசி வருகிறார். அதை இரகசியமாக வீடியோ செய்த மாணவர்கள், அந்த மாணவியை மிரட்டியுள்ளனர்.

தாம் சொல்வதை போல நடக்க வேண்டுமென்றும், இல்லையென்றால் வீீடியோவை மாணவியின் வீட்டிற்கு காண்பிப்போம் என மிரட்டியுள்ளனர்.

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த மாணவி, தனது சகோதரியின் பராமரிப்பில் வளர்கிறார்.  விடயம் சகோதரிக்கு தெரிந்து விடக்கூடாது என்ற அச்சத்தில், மாணவர்களின் சொற்படி மாணவி செயற்பட்டுள்ளார்.

அவரை தனிமையான பகுதிக்கு அழைத்து சென்று சில தடவைகள் துர்நடத்தையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்தை அறிந்த மாணவியின் சகோதரி, கெக்கிராவ கெக்கிராவா பொலிஸின் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்தில் முறையிட்டார். பொறுப்பதிகாரியான உப பொலிஸ் பரிசோதகர் இந்திராணி துரிதமாக செயற்பட்டு மாணவர்கள் இருவரையும் கடந்த 25ஆம் திகதி கைது செய்தார். துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி கெக்கிராவ மாவட்ட மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த கெக்கிராவ மாவட்ட நீதிவான் கே.கே.ராணியகொட, மாணவர்கள் இருவரையும் அநுராதபுரம் அபயா சிறுவர் இல்லத்தின் தங்க வைக்க உத்தரவிட்டதுடன், வரும் 31ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா முத்தரப்பு பேச்சு விரைவில்

உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு அமைதிப்...

நாடாளுமன்ற குடியிருப்பை பெற்றவர்களின் விபரம்

கோட்டையில் உள்ள மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில், தற்போதைய நாடாளுமன்றத்தைச்...

சிஐடியினர் அநுராதபுரம் சென்றால் முழு திருடர்களையும் ஒரே மேடையில் பிடித்திருக்கலாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தலைமையிலான பேரணியையும் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்