யாழ்ப்பாணம்தான் முதலிடம்!

Date:

இலங்கையில் நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில் யாழ் மாவட்டத்திலேயே நேற்று அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்திலிருந்து நேற்று 88 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. எனினும், வடக்கு சுகாதார திணைக்களத்தின் நேற்றைய அறிவிப்பின்படி, 143 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கம்பஹா மாவட்டத்திலிருந்து 29 பேரும், கொழும்பு மாவட்டத்திலிருந்து 26 பேரும், இரத்தினபுரியிருந்து 28 பேரும், அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து 20, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து 9 பேர், கண்டி, காலி, திருகோணமலை, மொனராகலை மாவட்டங்களிலிருந்து தலா 6 பேர், களுத்துறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலிருந்து தலா 5 பேர், குருநாகல். கேகாலை, பதுளை, வவுனியா மாவட்டங்களிலிருந்து தலா 4 பேர், அம்பாறை, புத்தளம் மாவட்டத்திலிருந்து தலா 3 பேர், மாத்தறை மாவட்டத்திலிருந்து 2 பேர், மாத்தளை, பொலன்னறுவை மாவட்டங்களிலிருந்து தலா ஒவ்வொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 18 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று நாடடில் 278 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், தொற்றாளர்களின் எணணிக்கை 91,839 ஆக உயர்ந்துள்ளது.

 

spot_imgspot_img

More like this
Related

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்