யாழ்ப்பாணம்தான் முதலிடம்!

Date:

இலங்கையில் நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில் யாழ் மாவட்டத்திலேயே நேற்று அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்திலிருந்து நேற்று 88 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. எனினும், வடக்கு சுகாதார திணைக்களத்தின் நேற்றைய அறிவிப்பின்படி, 143 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கம்பஹா மாவட்டத்திலிருந்து 29 பேரும், கொழும்பு மாவட்டத்திலிருந்து 26 பேரும், இரத்தினபுரியிருந்து 28 பேரும், அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து 20, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து 9 பேர், கண்டி, காலி, திருகோணமலை, மொனராகலை மாவட்டங்களிலிருந்து தலா 6 பேர், களுத்துறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலிருந்து தலா 5 பேர், குருநாகல். கேகாலை, பதுளை, வவுனியா மாவட்டங்களிலிருந்து தலா 4 பேர், அம்பாறை, புத்தளம் மாவட்டத்திலிருந்து தலா 3 பேர், மாத்தறை மாவட்டத்திலிருந்து 2 பேர், மாத்தளை, பொலன்னறுவை மாவட்டங்களிலிருந்து தலா ஒவ்வொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 18 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று நாடடில் 278 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், தொற்றாளர்களின் எணணிக்கை 91,839 ஆக உயர்ந்துள்ளது.

 

spot_imgspot_img

More like this
Related

மட்டு சித்தாண்டி முருகன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்யுமாறு கோரி ஆலயத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் 14 வருடங்கள் ஆகியும் கும்பாபிஷேகம்...

கொள்ளை வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகனுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார மற்றும்...

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்