நிறுவனமொன்றின் தேங்காய் எண்ணெய் இரண்டாவது ஆய்விலும் தோல்வி!

Date:

எஸ்லடொக்சின் என்ற புற்றுநோய் பதார்த்தம் அடங்கியுள்ளதாக கூறப்படும் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்த நிறுவனமொன்று, அதன் இரண்டாவது தர ஆய்வில் தோல்வியடைந்துள்ளதாக இலங்கை தர நிர்ணய நிறுவனம் தெரிவித்துள்ளது.

எஸ்லடொக்சின் குறிப்பிட்ட அளவினை விட அதிகமாக காணப்படுவதால் தர ஆய்வு அறிக்கை தோல்வியடைந்துள்ளதாக இலங்கை தர நிர்ணய நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அந்த நிறுவனம் இறக்குமதி செய்த எண்ணெயை மீள் ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் மூன்று நிறுவனங்கள் தமது மாதிரிகளின் இரண்டாம் தர ஆய்விற்கு மேன்முறையீடு செய்துள்ள நிலையில் அவற்றின் அறிக்கைகள் நாளை கிடைக்கப்பெறவுள்ளன.

எஸ்லடொக்சின் என்ற புற்றுநோய் பதார்த்தம் அடங்கிய சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய்யின் மாதிரிகளின் மறு பரிசோதனை தற்போது பல்வேறு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கை தர நிர்ணய நிறுவனம், சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு மற்றும் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றால் இந்த மறு பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இறக்குமதி நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டுக்கு அமைவாக இவ்வாறு குறித்த மாதிரிகள் மறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்