உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவதரித்த நாளையும், அவரின் நற்பணியை நினைவு கூரும் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் 129 ஜனன தின நிகழ்வு இன்று (27) காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு வீதி போக்குவரத்து அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் திருமதி கலைவாணி வன்னியசிங்கம், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், கல்முனை வீதி போக்குவரத்து அதிகார சபையின் பிரதம பொறியலாளர் ரீ.சிவசுப்பிரமணியம், காரைதீவு மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் என்.அருந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு காரைதிவு பிரதான சந்தியில் அமைக்கப்பட்டுள்ள விபுலானந்த சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

-பைஷல் இஸ்மாயில்-




