ஏமாற்றிய காதலனை அசிட் ஊற்றி கொன்ற காதலி!

Date:

தன்னை காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்த நபர் மீது காதலி ஆசிட் ஊற்றி கொலை செய்துள்ளார்.

ஆக்ரா நகரத்தில் உள்ள அவரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுபவர் சோனம்.

அவரும், அதே மருத்துவமனையின் ஆய்வகத்தில் உதவியாளராக பணியாற்றும் தேவேந்திரா என்பவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர்.

ஆனால், சமீபத்தில் தேவேந்திரா தான் வேறொரு பெண்ணை மணந்துகொள்ளப் போவதாக சோனமிடம் கூறியுள்ளார்.

இதனால், மிகுந்த கோபத்துக்கு ஆளான சோனம், வியாழக்கிழமை ஒருமுறை தன்னை வந்து சந்திக்குமாறு தேவேந்திரனை கேட்டுள்ளார்.

தேவேந்திராவும் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, தன்னை ஏமாற்றியதால் கடும் ஆத்திரத்தில் இருந்த சோனம், தேவேந்திரா மீது ஆசிட்டை ஊற்றியுள்ளார்.

பின்னர், முகம் கருகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவேந்திரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், தேவேந்திராவை திட்டமிட்டு கொலை செய்த குற்றத்துக்காக சோனம் கைது செய்யப்பட்டுள்ளார் என ஆக்ரா பொலிஸ் தெரிவித்துள்ளது.

சோனம் மீதும் ஆசிட் பட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வடக்கில் நிரந்தர நியமனம் கோரும் வெலிஓயா சிங்கள தொண்டர் ஆசிரியர்கள்

முல்லைத்தீவு, வெலிஓயா பிரதேச சிங்கள மொழிப் பாடசாலைகளில் நீண்ட காலமாகத் தொண்டர்...

இனியபாரதி பயங்கரவாத தடைச்சட்டத்திலிருந்து விடுவிப்பு

திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உள்ளிட்ட 6 மனித...

பாதாள உலகத்துடன் தொடர்பா?: டிஐஜி வருண ஜெயசுந்தரவிடம் விசாரணை!

இந்தோனேசியாவிலிருந்து பிடிக்கப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பாதாள உலக போதைப்பொருள் கடத்தல்காரரான ‘கெஹெல்பத்தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்