போலி ஆவணங்கள் தயாரித்து வாகனங்கள் விற்ற 4 பேர் கைது!

Date:

போலி ஆவணங்களை தயாரித்து வாகன விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநாகல் பிரதேசத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தி செல்லப்படும் அல்லது திருடப்படும் வாகனங்களின் ஆரம்ப பதிவுக்கான புத்தகங்களை காப்புறுதி நிறுவனங்களில் கொள்வனவு செய்து அதைபோன்று தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடன் சந்தேக நபர்கள் வாகனங்களை விற்பனை செய்திருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

2009இல் முல்லேரியாவில் வாகனமொன்று திருடப்பட்டதற்கும் இவர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள். ஆனால் அந்த வாகனம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அதே இலக்கத்தகடு, பதிவு புத்தகத்துடன் ஒரு வாகனத்தை மேல் மாணத்தின் தெற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து...

ஈரானை கடுமையாக தாக்குவது குறித்து ட்ரம்ப் பரிசீலனை

போரின் அடுத்த கட்டம் குறித்த ஒரு முக்கிய முடிவை எடுக்கவிருக்கும் நிலையில்,...

நான் குறிப்பிட்டது நாலு கால் புலியையே; 2 கால் புலிக்கு நான் ஆதரவல்ல: அந்தர் பல்டியடித்த ஊசி எம்.பி!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, "புலி"  என்ற சொல்லை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்