91,000ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!

Date:

இலங்கையின் கோவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று 91,000 ஐ கடந்தது.

நேற்று 253 கோவிட் -19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 91,018 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 238 பேர், மினுவாங்கொட-பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 15 நபர்களும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

தற்போது, 2,834 பேர் நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, COVID-19 இலிருந்து குணமடைந்த 324 பேர் வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 87,630 ஆக உயர்ந்தது. தொற்று சந்தேகத்தில் 435 பேர் தற்போது மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...

பேருந்துக்குள் இளம்பெண் மீது அத்துமீறல்: நடத்துனர் கைது!

பிபில-மொனராகல வழித்தடத்தில் இயங்கும் தனியார் பயணிகள் பேருந்தில் பயணித்த பெண் பயணி...

கம்பஹா உஸ்மானுக்கு 72 மணித்தியால தடுப்புக்காவல்

அசர்பைஜானிலிருந்து பிடிக்கப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பதுவத்த சமரவிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது வெளிப்படுத்தப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்