மியான்மரில் சிறுமி கொல்லப்பட்டதற்கு வலுக்கும் எதிர்ப்பு!

Date:

மியன்­மா­ரில் ஆர்ப்­பாட்­டம் செய்­த­தற்­காக தடுத்து வைக்­கப்­பட்ட 600 பேரை இராணுவ ஆட்­சி­யா­ளர்­கள் நேற்று விடு­தலை செய்­த­தாக மூத்த சிறைத்­துறை அதி­காரி ஒரு­வர் ஏஎஃப்பி செய்தி நிறு­வ­னத்­தி­டம் தெரிவித்துள்ளார்.

“இன்­செய்ன் சிறைச்­சா­லை­யில் இருந்து புதன்­கி­ழமை 360 ஆண்களையும், 268 பெண்­க­ளை­யும் விடு­தலை செய்­து­விட்­டோம்“ என்று சிறை அலு­வ­ல­கத்­தில் இருந்து அவர் கூறி­ய­தாக ஏஎ­ஃப்பி குறிப்­பிட்­டது. இருப்­பி­னும் அந்த அதி­காரி யார் என்ற விவ­ரம் வெளியிடப்படட­வில்லை.

இதற்­கி­டையே, இராணுவ ஆட்­சிக்கு எதி­ரான போராட்­டத்­தைத் தொடர மக்­கள் முடிவு செய்­துள்­ள­னர். ஏழு வய­துப் பெண் குழந்தை துப்­பாக்­கி­யால் சுட்டுக் கொல்லப்பட்டது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்­கள் வீடுகளில் இருந்­த­வா­றும் வர்த்­தக நிறு­வ­னங்­களின் கத­வு­களை மூடியும் அமைதி வழிப் போராட்டத்தை தொடர முடிவு செய்திருப்பதாகவும் ஏஎ­ஃப்பி தெரிவித்துள்ளது.

மாண்­டலே நக­ரில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை வீடு வீடா­கத் தேடிச் சென்ற பாது­காப்­புப் படை­யி­னர் ஒரு வீட்­டின் கதவை எட்டி உதைத்து துப்­பாக்­கி­யால் கண்­மூ­டித்­த­ன­மா­கச் சுட்­ட­னர். அந்த வீட்­டுக்­குள் தமது தந்­தை­யின் மடி­யில் அமர்ந்­தி­ருந்த சிறுமி துப்­பாக்­கித் தோட்­டா­வுக்­குப் பலி­யா­னார். பின்­னர் அவ­ரது தந்தை மீதும் அவர்­கள் துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­ய­தாக அவ­ரது மூத்த மகள் கூறி­ய­தாக ரொய்ட்­டர்ஸ் செய்தி தெரி­வித்­தது.

பெப்­ர­வரி 1ஆம் திகதி இராணு­வம் ஆட்­சிக்­க­விழ்ப்பை நடத்­திய பின்னர் அங்கு கொல்­லப்­பட்டுள்ள ஆகக் குறைந்த வய­து­டை­ய­வர் இச்­சி­று­மி­தான். இந்­தக் கொடூ­ரச் செய­லுக்கு உலக அள­வி­லான கண்டனங்கள் வலுத்து வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்