மனைவியை கழுத்தறுத்து கொன்று, சடலத்துடன் பெற்றோல் ஊற்றி எரிந்த கணவன்!

Date:

தனது மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவர், சடலத்தை வீட்டிற்குள் இழுத்து சென்று பெற்றோல் ஊற்றி எரித்தார். பின்னர் தனக்கும் பெற்றோல் ஊற்றி எரிந்து உயிரிழந்துள்ளார்.

இந்த கொடூர கம்பவளம் கம்பளை, அகுரமுல்ல பகுதியில் நேற்றிரவு நடந்தது.

உயிரிழந்தவர்கள் கம்பளை, வட்டஹேன, அகுரமுல்லவில் வசிக்கும் சார்லஸ் ரணவீர மதநாயக்க (68) மற்றும் சந்தனி சில்வா (57) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நீண்ட காலமாக நிலவிய குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கணவரும் மனைவியும் ஒரே காணியில் இரண்டு வீடுகளில் தனித்தனியாக வசித்து வந்தனர். கணவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.

சில காலத்திற்கு முன்பு கம்பளை நீதிமன்றம் உத்தரவிட்டபடி, பராமரிப்பு தொகையாக ரூ.12,000 கணவனால் செலுத்தப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர். இருப்பினும், அந்த தொகை போதாது, தொகையை அதிகரிக்க வேண்டுமென மனைவி பொலிசில் முறையிட்டுள்ளார்.

அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், அவர்களில் ஒருவர் வெளிநாட்டில் வசிக்கிறார். மற்ற மகள் திருமணமாகி அவர்களது வீட்டின் அருகே வசித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

நேற்று (24) தகராறு ஏற்பட்டபோது, ​​அவர்களது மகள்களில் ஒருவரின் மகன் இந்த சம்பவத்தைக் கண்டு பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்த பின்னர், சடலத்தை வீட்டுக்குள் இழுத்து சென்ற கணவன், இருவருக்கும் பெற்றோல் ஊற்றி எரிந்துள்ளார். பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது இரண்டு சடலங்களும் கருகிய நிலையில் காணப்பட்டன.

சம்பவ இடத்திற்கு வந்த கம்பளை நீதிவான் ரஞ்சித் பிரேமரத்ன விசாரணையை நடத்தினார், கண்டி சிறப்பு நீதித்துறை மருத்துவ அதிகாரி சிவசுப்ரமணியமும் சம்பவ இடத்திற்கு வந்தார்.

பிரேத பரிசோதனை இன்று (25) கண்டி பொது மருத்துவமனையில் நடத்தப்படும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய் அரசின் குதிரை பேரம்: பிரேமலதா கிடுக்குப்பிடி

முகத்தை மூடிக்கொண்டு தனது வீட்டுக்கு வந்ததவர் யார்? என்பதை முதல்வர் விஜய்...

16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தல்: 21 வயது குடும்பஸ்தரும் நண்பரும் மடக்கிப் பிடிப்பு!

மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டுக்கு சென்ற 16 வயது சிறுமி ஒருவரை...

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்