நாட்டில் பெருமெடுப்பில் காடழிப்பு இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற நுழைவாயிலில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
‘காடழிப்பை நிறுத்து’ என்ற வாசகங்களுடன் கூடிய பதாதைகளை தாங்கியபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் பாரிய காடழிப்பு நடைபெற்று வருவதாகவும், அதை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.




