யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் ஏற்பாட்டில் சிலர் மேடை போட்டு உட்கார்ந்துள்ளனர்.
இராணுவத்தின் பின்னணியில் சில தினங்களின் முன்னர் கொழும்பிலிருந்து பேரணியென்ற பெயரில் சிலர் கொழும்பிலிருந்து வாகனத்தில் வந்திருந்தனர். பின்னர், யாழ் நகரில் ஊடகவியலாளருடன் அடாவடியில் ஈடுபட்டனர்.
அந்த குழுவினரே இன்று யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பிரமாண்ட மேடையமைத்து உட்கார்ந்திருக்கிறார்கள்.
நான்கு பெண்களும், மூன்று ஆண்களும் மேடையமைத்து உட்கார்ந்துள்ளனர். அவர்களின் பின்னணியில், விடுதலைப் புலிகளால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என பதாதை கட்டப்பட்டுள்ளது.
இதில், முன்னாள் ரௌடிகள் என குறிப்பிடப்படுபவர்களும் உட்கார்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சிவில் உடையில் இராணுவத்தினர், புலனாய்வுதுறையினர் மற்றும் போக்குவரத்து பொலிசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.



