பம்பலப்பிட்டியில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலையின் மாணவன் காாணாமல் போயிருந்த நிலையில், நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். அவர் வேறு இடமொன்றில் தங்கியிருந்து விட்டு வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
அவர் பாதுகாப்பாக இருப்பதாக அவரது தாயார் உறுதிப்படுத்தினார்.
வியாழக்கிழமை இரத்மலானைல் உள்ள வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் காணாமல் போன மாணவரை கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. வியாழக்கிழமை அதிகாலை வீட்டை விட்டு வெளியேறிய அவர், பின்னர் காணாமல் போனதாகக் கூறப்பட்டது.
காணாமல் போன சிறுவனை அவரது குடும்பத்தினர் புகார் அளித்ததை அடுத்து மவுண்ட் லவ்னியா பொலிசார் விசாரணையைத் தொடங்கினர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1