பங்களாதேஷ் பறந்தார்!

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (19) காலை இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக பங்களாதேஷுக்கு புறப்பட்டார்.

பங்களாதேஷ் தேச தந்தை, ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழா, பங்களாதேஷின் சுதந்திரதின் பொன்விழா ஆகிய நிகழ்வுகளில் கலந்து கொள்ள பிரதமர் பங்களாதேஷ் பயணமாகிறார்.

அனைத்து சார்க் உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இந்த நிகழ்விற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் ராஜபக்ஷ, இந்த பயணத்தில் பங்களாதேஷ் பிரதமர் ஹசீனா, ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீத், அத்துடன் பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் மற்றும் பங்களாதேஷ் வங்கி ஆளுநருடன் உயர்மட்ட இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார்.

விவசாயம், தொழில்நுட்ப கல்வி, சுகாதாரம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றன.

பிரதமர் ராஜபக்ஷ தலைமையிலான குழு நாளை இரவு இலங்கைக்கு திரும்பும்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த ஒரே ஜனாதிபதி அனுரவாம்!

மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிழக்கு மாகாண...

வாகன, தங்க கடன்களுக்கான புதிய கடன் கட்டுப்பாடுகள்: இன்று முதல் நடைமுறை!

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்