எரிவாயுக்களின் விலை அதிகரிக்கிறதா?: வெளியான தகவல்!

Date:

உள்ளூர் சந்தையில் எரிவாயு பற்றாக்குறை இல்லை என்றும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் உள்நாட்டு சந்தை குறித்து மறுஆய்வு செய்யும் கலந்துரையாடலொன்று நேற்றுஅலரி மாளிகையில் நடைபெற்றது.

எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு சலுகை விலையில் வழங்குவதற்கான வழிகளைக் கண்டறிய கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு எரிவாயுக்களின் விலையை அதிகரிக்க நிறுவனங்கள் கோருவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை சுங்கத்தில் பறிமுதல் செய்யப்பட்டு வைத்திருந்த 3,000 மெட்ரிட் அரிசியை பொது மக்களுக்கு விநியோகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் திணைக்களம் சேமித்துள்ள அரிசியை பொதுமக்களின் பாவனைக்கு விநியோகிக்கவும், உள்ளூர் விவசாயிகளிடமிருந்து 25,000 மெட்ரிட் அரிசி வாங்குவதற்கும் கவனம் செலுத்தப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பம்.. தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு… த.வெ.க முன்னிலையில்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர், துணை முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள்...

முல்லைத்தீவில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்...

யாழில் பியர் போத்தலால் தாக்கப்பட்டவர் பலி

யாழ்ப்பாணத்தில் பியர் போத்தலால் தாக்கப்பட்டதில் 36 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்