29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

யாழ் நகரில் ரிக்ரொக் காதலியுடன் மல்லுக்கட்டிய காதலன்!

காதலியின் ரிக்ரொக பதிவுகள் பிடிக்காமல் கண்டித்ததால், அவர் ரிக்ரொக்கிலேயே ஒரு காதலனை பிடித்து விட்டதாக கூறி, யுவதியுடன் இளைஞன் ஒருவர் மல்லுக்கட்டிய சுவாரஸ்ய சம்வம் இடம்பெற்றது.

யாழ் நகரிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் நேற்று (16) மாலை இந்த சம்பவம் நடந்தது.

நேற்று மாலை இரண்டு யுவதிகள் பல்பொருள் அங்காடிக்கு வந்து பொருட்களை கொள்வனவு செய்து கொண்டிருந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு இளைஞர்கள் பல்பொருள் அங்காடிக்குள் புகுந்தனர். அதில் ஒரு இளைஞன், பொருட் கொள்வனவில் ஈடுபட்டிருந்த யுவதியுடன் தகராற்றில் ஈடுபட்டார்.

இருவரும் உரத்த குரலில் முரண்பட, பல்பொருள் அங்காடி, பாதுகாப்பு ஊழியர்கள் தலையிட்டு நிலைமையை சுமுகமாக்க முயன்றனர்.

முரண்பட்ட இளைஞன், அந்த யுவதியை தொலைபேசியில் வீடியோ படம் பிடிக்க முயல, அவர் கைத்தொலைபேசியை தட்டிவிட, நிலத்தில் விழுந்த தொலைபேசி உடைந்தது. கோபமடைந்த இளைஞன், யுவதியை தாக்க முயன்றபோது, அங்கிருந்த ஊழியர்களால் அவர் வெளியேற்றப்பட்டார்.

தான் அந்த யுவதியை சில வருடங்களாக காதலித்ததாகவும், அண்மைய வருடங்களில் அவர் ரிக்ரொக் வீடியோக்களை வெளியிட்டு, அதன் மூலம் வேறொரு காதலை ஏற்படுத்தி, தன்னை தவிர்த்து வருவதாகவும் இளைஞன் குற்றம்சாட்டினார்.

யுவதி சில தினங்களின் முன்னரும் ரிக்ரொக் வீடியோ வெளியிட்டதாகவும், அதையெல்லாம் எப்படி சகித்துக கொள்வதென்றும் சச்சரவில் ஈடுபட்டார்.

பங்பொருள் அங்காடிக்கு வெளியே இளைஞர்களை அனுப்பிய பின்னரும், முன்னாள் காதலன் முறுகிக் கொண்டு நின்றார். அங்காடியினர், பொலிசாரை அழைக்க முயன்றபோது, இளைஞர்கள் அங்கிருந்து நழுவிச் சென்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment