ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மைக்கல் பச்லெட்டை இலங்கைக்கு அழைப்பது குறித்து இலங்கை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில், இலங்கை தொடர்பாக பச்லெட் அம்மையார் சமர்ப்பித்த கறாரான அறிக்கையையை தொடர்ந்து, இந்த விஷயம் அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கைக்கு வரும்படி அழைப்பிதழ் வழங்குவதை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் நாட்டிற்கு வருவதன் மூலம், உண்மையான களநிலவரத்தை அறிந்து கொள்ளலாமென அரசாங்கம் நம்புகிறது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே, இந்த விவகாரம் பரிசீலிக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஒரு முறையான அழைப்பிதழ் அனுப்பப்பட்டு அவர் ஏற்றுக்கொண்டால், சமீபத்திய காலங்களில் இலங்கைக்கு வருகை தரும் ஐ.நா. மனித உரிமைகளுக்கான மூன்றாவது உயர் ஸ்தானிகர் ஆவார்.
2013 ஆம் ஆண்டில், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது இலங்கைக்கு விஜயம் செய்தார்.
அல் ஹுசைன், பெப்ரவரி 2016 இல் மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது இலங்கைக்கு விஜயம் செய்தார்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் முடிவில் முறையான அழைப்பை மைக்கல் பச்லெட்டுக்கு அனுப்ப வாய்ப்புள்ளது என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.